Saturday, February 5, 2011

இந்தியாவில் ஊழல் புற்றுநோய் போல பரவிவருகிறது: அப்துல் கலாம்!

துபை, பிப்.4: இந்தியா சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஊழல் ஒன்று என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். புற்றுநோய் போன்ற நிலை இந்தியாவில் பரவிவருவதால் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என அவர் கூறினார். அரசியல்-அதிராக வர்க்கம்-நீதி அமைப்பில் ஊழல் பரவி வருகிறது. அதன் வளர்ச்சி வேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என துபைக்கு சமீபத்தில் வந்த கலாம் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment