Thursday, February 17, 2011

உண்மையை பேசிய ராஜபக்சேக்கு நன்றி!!

கொழும்பு, பிப்.16- எகிப்து நிலை இலங்கைக்கு வராது என்று அதிபர் ராஜபட்ச கூறியதாக தகவல்கள் "திவயின" என்னும் சிங்கள நாளிதழின் வெளியாகியுள்ளது. தனக்கு புற்றுநோய் இல்லை என்றும், தான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை ராஜபட்ச பேட்டி அளித்ததாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் குழப்பங்களை விளைவிக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் எகிப்தின் நிலை இலங்கையில் வர அனுமதிக்க மாட்டோம் என்றும் ராஜபட்ச கூறியதாக இணையதளத் தகவல்கள் கூறுகின்றன. 

சிந்திக்கவும்: லட்ச்ச காணகில் தமிழர்களை கொன்று குவித்துவிட்டு "டாப் கில்லெர் நம்பர் ஓன்" என்ற வரிசையில் உள்ள "ராசபக்சே" தனது வாழ்வில் இப்பொதுதான் உண்மையை பேசி உள்ளார். ஆம்! அவர் சொல்வது உண்மைதானே! எகிப்த் மக்கள் முபாரக்கை பதவி விலக சொல்லி நாட்டை விட்ட போக அனுமதித்தார்கள். ஆனால் எம் தமிழ் குல மக்கள் உனக்கு அப்படி ஒரு வாய்ப்பை தரமாட்டார்கள் என்ற உண்மையை சொல்லி உள்ளார். ராசபக்சே நீங்கள் அவ்வளவு எளிதாக ஓடி ஒளிந்து விட முடியாது. தமிழர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என்பதை சரியாக உணர்ந்து தீர்க்க தரிசனமாக பேட்டி அளித்ததற்கு நன்றி. நீங்கள் பயங்கர ஆட்கொல்லி ஆயூதங்களை பயன்படுத்தி தமிழ் மக்களை கொன்று குவித்தீர்கள்.

உங்களை வரலாறு கோழை என்றே பதிவு செய்கிறது. நீங்கள் சுத்த வீரனாக இருந்தால் உங்கள் சிங்கள படையோடு தனித்து போர் புரிந்திருபீர். நீர் வாடி கட்டிய கோழை என்பதை நீர் துணைக்கு அழைத்த நாடுகளின் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம். பண்டைய வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை தமிழன் என்றால் வீரன், புறமுதுகு காட்டான், தனித்து போர் செய்யும் வல்லமை பெற்றவன் என்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. உம்மையும் உமது சிங்கள பேரினவாத ராணுவத்தையும் வரலாறு வாடி கட்டிய கோழைகள் என்று பதிந்துள்ளது. உங்களுக்கு தமிழர்கள் சீக்கிரம் ஒரு பாடம் புகட்டுவார்கள் பொறுத்திருங்கள். உங்களை நோக்கிய அம்பு லேட்டா வந்தாலும் லேட்டசா வரும்.

அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்

0 comments:

Post a Comment