Monday, February 28, 2011

நலத்திட்டங்களை அறிவித்தார் சவுதி மன்னர்.


சவுதி மன்னர் அப்துல்லா
சவுதி மன்னர் அப்துல்லாசவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா மூன்று மாத கால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவரின் வருகையை ஒட்டி வீதிகள் எங்கும் தேசிய கொடி பறந்து கொண்டிருந்தன. அரச ஊடகம் உற்சாக மிகுதியில் காணப்பட்டது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் சிலவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சவுதி மன்னர் நாடு திரும்பியுள்ளார்.
சவுதி அரேபியாவின் நீண்ட நாள் கூட்டாளியான எகிப்தின் ஹோஸ்னி முபாராக் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்.
பஹ்ரைன் மற்றும் யெமனில் நடைபெறும் வீதி போராட்டங்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிலர், அரசியல் சுதந்திரம் இல்லாத சவுதி அரேபியாவிலும் பிரச்சனை வெடிக்கலாம் என எண்ணுகின்றனர். சவுதி அரேபியாவை பல பல காலமாக ஆண்டு வருபவர்கள் அங்கு அரசியல் சுதந்திரத்தை அனுமதித்ததே கிடையாது.
இதையெல்லாம் உணர்ந்து தான் என்னவோ, 87 வயதான சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா யாரும் எதிர்பாராத பல அதிரடி நல திட்டங்களை தற்போது அறிவித்துள்ளார். இவர் அறிவித்த திட்டங்களின் மதிப்பு கிட்டதட்ட 3700 கோடி அமெரிக்க டாலர்கள்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, வேலை வாய்ப்பிலாமல் உதவுவதற்கு மற்றும் குடும்பங்களுக்கு நியாய விலையில் குடியிருப்பு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் உதவி மற்றும் கடன் தள்ளுபடி போன்ற சலுகைகள் கூட மன்னரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மன்னரால் அறிவிக்கப்பட்ட நல திட்டங்களில் அரசியல் சீர்திருத்தம் குறித்து எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
உலகத்தில் மிக பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா மன்னராட்சி முறையிலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமோ, அரசியல் கட்சிகளோ கிடையாது.
எதிர்வாதங்களை வைப்பவர்களை சவுதி அரேபியாவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அரசியல் முறை முற்றாக மாற்றப்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை மற்றும் வீடு பற்றாக்குறை ஆகியவை சவுதி அரேபியாவில் மிகப்பெரிய பிரச்சனை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சவுதி அரேபியாவின் பெரும்பாலான நிலப்பகுதி மன்னர் குடும்பத்தின் சொத்தாக இருப்பதால், இந்த நிலத்தை விற்க போகிறார்களா அல்லது தானமாக கொடுக்க போகிறார்களா என்பது தெரியவில்லை

0 comments:

Post a Comment