Saturday, May 25, 2013

இஸ்ரத் வழக்கு:சிங்காலின் ஜாமீன் மனு மீதி திங்கள் கிழமை தீர்ப்பு!

                               25 May 2013 ishrat jahan fake encounter
 
     அஹ்மதாபாத்:இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி எஸ்.பி.சிங்காலின் ஜாமீன் மீதான விசாரணையில் தீர்ப்பை வருகிற திங்கள் கிழமை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த பெப்ருவரி மாதம் எஸ்.பி.சிங்காலை சி.பி.ஐ கைதுச செய்துள்ளது. ஆனால், இதுவரை சி.பி.ஐ குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கவில்லை என்று சிங்காலின் வழக்கறிஞர் வாதிட்டார். இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான முன்னாள் போலீஸ் அதிகாரி ஜே.ஜி.பார்மர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இவ்வழக்கு தொடர்பாக இதர இரண்டு போலீஸ் அதிகாரிகளான பி.பி.பாண்டே, டி.ஜி.வன்சாரா ஆகியோரை விசாரணைச் செய்ய இருப்பதாகவும், இது பூர்த்தியாகாததால் 90 தினங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை திங்கள் கிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது

0 comments:

Post a Comment