Saturday, May 25, 2013

நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது கறுப்புச் சட்டம்:தேசிய அளவில் எஸ்.டி.பி.ஐ நடத்திய போராட்டம்

                     25 May 2013 SDPI Protest against balck laws
 
     புதுடெல்லி:நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது கறுப்புச் சட்டங்களை சுமத்தி சிறையில் அடைப்பது, கொலைச் செய்வது ஆகிய குற்றங்களை புரிவோருக்கு எதிராக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் போராட்டம் நடத்தியது. நிரபராதி என்று நிமேஷ் கமிஷன் தெரிவித்த காலித் முஜாஹிதை போலீஸ் கொலைச் செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஜி தாராபுரி கூறிய தகவல்களுக்கு மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்கவேண்டும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும், யு.ஏ.பி.ஏ, அப்ஸா, மோக்கா போன்ற கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியது. டெல்லி, மஹராஷ்ட்ரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் இம்மாதம் 28-ஆம் தேதியும், கர்நாடகாவில் 27-ஆம் தேதியும் போராட்டங்கள் நடைபெறும்

0 comments:

Post a Comment