Saturday, May 25, 2013

மரண வாக்குமூலத்தை யாரும் பதிவுச் செய்யலாம்!-உச்சநீதிமன்றம்!

                             25 May 2013 No one can witness the death registration high court
 
     புதுடெல்லி:மரண வாக்குமூலத்தை பதிவுச் செய்ய மாஜிஸ்ட்ரேட், போலீஸ் ஆகியோரின் சேவை கட்டாயம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மரண வாக்குமூலத்தை பதிவுச் செய்வோர் மன நல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை என்று நீதிபதிகளான பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் தெரிவித்துள்ளது. வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள, மரணிக்கும் நிலையில் இருப்பவரின் மன நலம் சரியாக உள்ளது என்று கூறும் மருத்துவரின் சான்றிதழ் தேவையில்லை. மரணிக்கும் நிலையில் இருப்பவர் சாத்தியமான தகவல் தொடர்பு வழிகள் மூலம் அளிக்கும் அனைத்து வாக்குமூலங்களும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
 
      மரண வாக்குமூலத்தை நம்பமுடியாது என்று சுட்டிக்காட்டி மருமகளை எரித்துக் கொலைச் செய்த கணவரின் தந்தை, தாய் ஆகியோரை விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற பெஞ்ச் இதனை தெரிவித்தது.

0 comments:

Post a Comment