Monday, May 20, 2013

பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதி சுட்டுக்கொலை!

                        20 May 2013 Zahra Shahid Hussain's death.
 
     இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸஹ்ரா ஷாஹித் ஹுஸைன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 
     அவரது கொலையை கண்டித்துள்ள இம்ரான்கான், ‘அவரது கொலை திட்டமிட்ட ஒரு பயங்கரவாத செயல்’ என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் சென்ற வாரம் நடந்த பொதுத் தேர்தலில் கராச்சி தொகுதி ஒன்றில் வாக்குப்பதிவு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அங்கு மறு வாக்குப்பதிவு நடக்கவிருந்ததற்கு சில மணி நேரங்கள் முன்பாக அவ்வூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக வைத்து ஸஹ்ரா சுடப்பட்டுள்ளார்.
 
     கராச்சியில் வலுவாகவுள்ள எம் கியு எம் (முதாஹிதா குவாமி மூவ்மெண்ட்) கட்சியினர்தான் இந்த கொலைக்கு காரணம் என இம்ரான் கான் பழிசுமத்தினார். எம் கியு எம் கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசைன் ஊடகங்களில் பேசும்போதே கூட தனது கட்சித் தொண்டர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்தார் என இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் உள்ள அல்தாஃப் ஹுசைன் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார் என புகார் தெரிவித்திருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் கான் குற்றம்சாட்டினார்.

0 comments:

Post a Comment