Friday, May 24, 2013

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண் பரிசோதனை முகாம்!


     கடலூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது.


     அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் கடந்த 13.04.13 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

     கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் K.முஜிப் அவர்கள் தலைமை தாங்கினார். இம்முகாமில் பொது மக்கள் சுமார் 120 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


0 comments:

Post a Comment