எஸ்.டி.பி.ஐ அரசியல் கட்சி தொடங்கிய நாள் முதற்கொண்டு துறைமுகம் தொகுதியின் தலைவராக அமீர் சுல்தான் விளங்கிவருகிறார். துடிப்பான இளைஞராக இருக்கும் இவர் தனது தொகுதியில் பல மேம்பாட்டு பணிகளை செய்துள்ளார். குப்பைகளை சுத்தம் செய்தல், சாக்கடை அடைப்பை சரிசெய்தல், மின்சார வெட்டு போன்ற இடையூறுகளுக்காக மாநகராட்சியை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறார். ஆள் பலம், பண பலம் கொண்ட அரசியல் காலகட்டத்தில் எந்த ஒரு பலமும் இல்லாமல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆணையின் பெயரில் இன்று தனது வாழ்க்கையில் முதன் முதலாக அரசியல் யுத்தம் நடத்த இருக்கிறார். தான் போட்டியிடுகின்ற 60வது வார்டில் குறிகிய காலத்திலேயெ பலரிடம் நன்மதிப்பை பெற்றவராக விளங்குகிறார்.
0 comments:
Post a Comment