Saturday, December 17, 2011

கண்ணீர்...





கண்ணீர் என்பது
உன்னை நீயே 
சுத்தப்படுத்திக்கொள்ளும்
மருத்துவம்!

கண்ணீர் இறைவன் 
தந்த மகத்துவம்.
பெண்களுடைய 
போராட்டத்தின் 
ஆயுதம்.

பல முகவரிகளுக்கு 
கண்ணீர் 
கைக்கொடுக்கும்
பெண்கள் வலிகளோடு 
அழுது தான்,
பிள்ளைகளை பெற 
வேண்டிவுள்ளது...

தேவைக்கும்
புடவைக்கும்
கண்ணீர் சிந்தியே
ஆண்களிடம் 
வாங்க வேண்டிவுள்ளது.

ஏழைகளின் 
கண்ணீர் 
வறுமையை 
வசைப்பாடும் 

அகதிகளின் 
கண்ணீர் 
சுதந்திரம் தேடும் 

கண்ணகி சிந்திய 
கண்ணீர் 
சரித்திரம் சொல்லும் 

நிம்மதியை 
தேடிய வண்ணம் 
இருட்டுக்குள் 
சிந்திய கண்ணீர் 

சிதறிய நிலையில் 
தலையணையை 
ஈரமாக்கி
கறைகளாய் இருக்கும் 

அடிப்பட்ட 
காயத்திற்கு 
வலிப்போக்கவும் 

ஆறுதலுக்கு 
ஆட்களில்லாத 
கண்ணீரும் 
நிவாரணம்...

துக்கத்திற்கு
கண்ணீரின் 
தற்கொலை 
அவசியம்...

அழுதுப் பார் 
உள்ளம் லேசாகும்
உனக்கு நலம் தரும்
மனமும் மாறும்...

தேவை எனில் 
கண்ணீர் சிந்திப் பார்...
எல்லாம் கண்ணீரோடு 
கரைந்து போகும்!
thanks to vazeerali blogger

0 comments:

Post a Comment