Friday, December 16, 2011

பலஸ்தீனில் அல்லாஹ்வின் இல்லங்களை தாக்கும் இஸ்ரேலியர்

பலஸ்தீனின் மேற்குக் கரையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் ஒரு பள்ளிவாசல் மீது தீ மூட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, பலஸ்தீனர்களுக்கு எதிரான வாசகங்கள் பள்ளிவாசல் சுவர்களில் கிறுக்கப்பட்டுள்ளன.


யூத தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என இஸ்ரேல் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேற்குக் கரையிலுள்ள புர்கா கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசலே நேற்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது பள்ளிவாசலின் தள வாடங்கள், கம்பளி போர்வை என்பன தீயிடப்பட்டுள்ளதோடு பள்ளிவாசல் வெளிப்புறச் சுவர்களில் மோசமான வார்த்தைகள் ஹிப்ரு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் யுத்தம் என சிவப்பு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதேபோன்று நேற்று முன்தினம் 13 ஆம் நூற்றாண்டு பழைமைவாய்ந்த பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு பல தரப்புகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன
yarlmuslim

0 comments:

Post a Comment