Friday, December 23, 2011

உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி-2012 அதிரையில் நடைபெற இருக்கிறது .


அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதி துவங்க உள்ளது. கடந்த முறை நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப்போட்டியில் நுVற்றுக்கணக்கான போட்டியாளர்களும், அதிகமான பார்வையாளர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்துக்கொண்டு போட்டியையும் அரங்கத்தையும் அருமையாக சிறப்பித்தனர், இதுபோன்று இந்த ஆண்டும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் போட்டியாளர் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அதிராம்பட்டினத்தின் ஒற்றுமையை பற்றி அனைவரும் அறிவர். இந்த ஒற்றுமையை வழியுறுத்தியும், ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் சினம் கொண்டு திரியும் விசமிகளின் எண்ணங்களை வேறருக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போட்டி செம்மையாக நடைபெற ஒத்துழைப்பதுடன் இந்த போட்டியை உற்சாகத்துடன் நடத்திக்கொண்டிருக்கும் அதிரை ஸ்போர்ட்ஸ கிளப் இளைஞர்களை பாராட்டியும் பலர் தங்கள் ஆதரவுகளை கொடுத்துவருகின்றனர்.
நமது ஊரை அமைதிப்படுத்தினால் உலகமே அமைதியுறும். இளைஞர்களே உற்சாகத்துடன் களம் இறங்குவீர் வெற்றி வாகை சூடுவீர். துள்ளி ஓடும் போட்டியாளர்களை ஊக்கத்தையும், ஒத்துழைப்புககளையும் கொடுத்து வாழ்த்துவீர்!
உலக அமைதிக்கான எங்களின் வாழ்த்துக்கள்
அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், அதிராம்பட்டினம்

நன்றி
SENA MUNA
DIGITECH.
Opp. KMC, College Road
SHABNAM COMPLEX 
Adirampattinam,Thanjavur Dt-614701
Ph : 04373 242220,Fax : 04373 241240

0 comments:

Post a Comment