Wednesday, January 18, 2012

தமிழ்நாடு: இடஒதுக்கீடு பேரணிக்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில் தொடங்கியது!


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று சென்னையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் தற்போது சென்னை மாநகரில் தொடங்கியுள்ளது.


நீதிபதி ராஜேந்திர சர்சார் அவர்கள் தனது அறிக்கையில் பரிந்துரை செய்ததை போன்று மத்தியிலும் மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, போன்றவற்றில் உரிய இடஒதுக்கீட்டை வழங்கக்கோரி தமிழகத்தில் சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை, கோவை போன்ற இடங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது. இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சென்னை மாநகர் முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

0 comments:

Post a Comment