Sunday, May 8, 2011

மேற்கு பப்புவா மாகாணத்தின் கய்மானா என்ற துறைமுக நகரில்..

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 27 பேர் பலி

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
பயணிகள் விமானமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் இதில் பயணித்த எவரும் உயிர் தப்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மேற்கு பப்புவா மாகாணத்தின் கய்மானா என்ற துறைமுக நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆசியாவில் அதிகளவு விமான விபத்துக்கள் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேஷியா கருதப்படுகின்றது. விமானம் வெடித்து கடலில் மூழ்கியதாகவும் சம்பவத்தில் எவரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் இந்தோனேஷிய விமானப்படையினர் அறிவித்துள்ளனர்.
 
உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

0 comments:

Post a Comment