Sunday, May 8, 2011

mothers Day!! பெண்களை அவமதிக்கும் இந்தியா!!

May 8, புதுடில்லி: வளர்ந்த நாடுகளின் வரிசையில் தாய்மை கவனிப்பில் இந்தியா பின்னடைவை கொண்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் வேளையில் ஒவ்வொரு நாட்டிலும் தாய்மையின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் வளரும் நாடுகள், குறைந்த வளர்ச்சி நாடுகள் என்ற மூன்று பிரிவுகளில் ஆய்வு நடத்தப்படுகிறது.

மேலும் பெண்களின் பிறப்பு விகிதம், கல்வி வளர்ச்சிநிலை, அரசில் பெண்களின் நிலை போன்றவை கணக்கெடுக்கப்படுகிறது.

கடந்த 2010 ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின்படி 77 நாடுகளின் வரிசையில் இந்தியா 73-வது இடத்தை பிடித்துள்ளது.

மகப்பேறு காலத்தை பொறுத்த வரையில் இந்தியாவில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் 43 வளர்ச்சியடைந்தநாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment