Sunday, January 8, 2012

கருணாநிதி,ஸ்டாலின் மீது ரூ.150 கோடி நில அபகரிப்பு புகார் கொடுத்த 70 வயது நபர்.


சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த எஸ்.என்.ஆறுமுகம் என்பவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது நில அபகரிப்புப் புகார் ஒன்றைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். எழுபது வயதான அவருக்கு, சொந்த ஊர் மயிலாடுதுறை.
அங்கு லாரி, பஸ் டிரான்ஸ்ஃபோர்ட் மற்றும் அசிரி ஆலை நடத்தி வருகிறார். நிறுவனங்கள், காபி எஸ்டேட் என கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் அளவுக்கு  சொத்துக்கள் உள்ளதாம். அந்த சொத்துக்களை வளைக்க முயன்ற சிலர் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தினார்களாம்.
இதுகுறித்து கோர்ட்டுக்குப் போய் பாதுகாப்பு கேட்டாராம். 2009ல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க கோர்ட் உத்தரவிட்டும், எந்தப் பலனும் இல்லையாம். இவ்விவகாரம் குறித்துதான் தற்போது கமிஷனரிடம் மனு கொடுத்திருக்கிறார். அதுவும் 81 பேர் மீது! கருணாநிதி, ஸ்டாலின், கே.சி.பழனிச்சாமி, சேகர்பாபு உள்பட பலர் மீது புகார் கூறியுள்ளார். மிரட்டல் புகாரே மிரட்டலாக இருக்கிறது

as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment