Friday, May 6, 2011

தேர்தல் ஸ்பெசல்!! ஒவ்வொரு மேஜையிலும் வீடியோ கேமரா!!


May 6, தமிழகத்தில் வரும் 13ந் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 13ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 

வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. 

அந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் விழிப்புடன் பாதுகாத்து வருகிறார்கள். வருகிற 13ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க ஒவ்வொரு மேஜையிலும் வீடியோ கேமரா பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

0 comments:

Post a Comment