Thursday, October 25, 2012

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? சம நீதி மாநாடு - கேரளா மாநிலம் கொச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்



கேரளா : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரளா மாநிலம் கொச்சியில் 18.10 .2012 அன்று நடத்திய சம நீதி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறித்து அவதொர்று பரப்புபவர்களுக்கு இம்மக்கள் வெள்ளம் தகுந்ததொரு பாடமாக அமைந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் எந்தவொரு இயக்கத்தையும் தவறான பிரச்சாரங்கள் மூலம் தடுத்து விட முடியாது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தியது. தேச விரோத சக்திகளுக்கு தகுந்ததொரு எச்சரிக்கையையும் இம்மாநாடு விடுத்துள்ளது. 

மாநாடு நடைபெற்ற மெரைன் டிரைவ் பகுதிக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே நிரம்பி வழிந்தது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்த பொழுதும் எவ்வித வாகன நெரிசலும் ஏற்படா வண்ணம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தொண்டர்கள் காவல்துறையினர் வெகுவாக பாராட்டும் வகையில் திறமையாக பணியாற்றினார். இது போன்ற மக்கள் வெள்ளத்தை இதற்கு முன்னர் மெரைன் டிரைவ் கண்டதில்லை என்று அப்பகுதி வியாபாரிகளும் வாகன ஓட்டுனர்களும் தெரிவித்தனர்.

EM

மாநாடு மாலை 4 .30 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் தொடங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்திய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் " பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்கும் என்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாடுபடும் என்றார். சமநீதி என்பது இம்மாநாட்டிற்கான தலைப்பு மட்டுமல்ல என்றும் இயக்கம் ஆரம்பித்த நாளிலிருந்தே இதனை வலியுறுத்தி வருகின்றோம் என்றார். நீதி மற்றும் சமத்துவத்தை நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. ஜனநாயகம் என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தையும் , மதச்சார்பின்மை என்பது இம்மாதத்தின் மீதும் பாரபட்சம் காட்டாமல் இருப்பதையும் குறிக்கும். அதிகாரத்திற்கு வருபவர்கள் இக்கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வருபவர்கள் இந்த அடிப்படைகளை புறம் தள்ளுகின்றனர். அத்துடன் ஒதுக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் மேலும் ஒதுக்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு பெற்று சக்தி பெறுவது தான் இதற்கான தீர்வு.

முஸ்லிம்கள் தங்களுக்கான உரிய பிரதிநித்துவத்தை சிறைச்சாலைகளில் மட்டும் தான் பெறுகின்றனர். 25 % உள்ள முஸ்லிம்கள் சிறைகளில் 37 % உள்ளனர். இவர்களில் 70 % விசாரணை கைதிகள் என்பது இன்னும் அதிர்ச்சியை அளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா குறித்து பரப்பப்பட்டு வரும் அவதூறுகளை மக்கள் ஏற்கவில்லை என்பதை தான் இங்கு திரண்டுள்ள மக்கள் வெள்ளம் உணர்த்துகிறது. பல்வேறு துறைகளிலும் ஒதுக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தை சக்திப்படுத்துவதர்காக போராடி வரும் நவீன சமூக இயக்கம் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா. பாதுகாப்பற்ற உதவியற்ற நிலையில் உள்ள முஸ்லிம் சமூகத்தை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுகள் பாதுகாக்கும் என்றும் " அவர் குறிப்பிட்டார்.

Baselios Mar Thoma Yakob I Catholica Bava

பின்னர் பேசிய கத்தோலிக்க பாதிரியார் அவர்கள் தனது உரையில் " ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக போராடி வரும் இயக்கங்களுக்கு அரசாங்கம் தீவிரவாத முத்திரை குத்தி அவற்றை ஒடுக்குவதாக தெரிவித்தார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று நான் முடிவெடுத்தவுடன் என்னுடைய முடிவை மாற்றுமாறு சர்ச் நிர்வாகிகளும் ஊடகங்களும் என்னை வற்புறுத்தின இருந்த போதும் மாநாட்டில் கலந்து கொள்வது என்று நான் முடிவெடுத்தேன். சமநீதி என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் துயர் துடைக்க யாரேனும் வருவார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஒரு விடிவெள்ளியாக உதித்திருக்கிறது " என்று குறிபிட்டார்.

சமநீதிக்கான போராட்டத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் மாநாட்டில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் களைந்து சென்றனர். கேரளாவில் இது போன்று சமநீதி மாநாடுகள் அக்டோபர் 30 அன்று கோழிக்கோட்டிலும், நவம்பர் 4 அன்று திருவனந்தபுரத்திலும் நடைபெற இருக்கிறது

0 comments:

Post a Comment