Friday, October 12, 2012

கேரளாவை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம்! : ஒரே வாரத்தில் இருவேறு முயற்சிகள்!


மலப்புரம் மாவட்டம் எடக்கப்பரம்பா என்ற  ஊரில் "எல்.பி."அரசு பள்ளிக்கூடம் உள்ளது.
அதில், கடந்த திங்கள் (08/10) அன்று மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக "மாட்டிறைச்சி" கொடுக்கப்பட்டது. இறைச்சி உண்ணாத மாணவர்களுக்கு மூக்கடளை,  வாழைப்பழம் உள்ளிட்ட சத்துணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்ப்பாடுகளை "ராஜேஷ்" மற்றும் "ஜஸ்டின்" ஆகிய 2 ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில், முஸ்லிம்களின் பங்களிப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை. பள்ளியில் மாட்டிறைச்சி வழங்கப்படுவதை கேள்விபட்ட ஆர்.எஸ்.எஸ், ஹிந்து ஐக்கிய வேதி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்பினர், முஸ்லிம்களுக்கெதிரான கோஷங்களை போட்டபடி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். அதோடு, முஸ்லிம்களுக்கு கட்டாய "பன்றிக்கறி" ஊட்டுவோம் எனவும் கொக்கரித்தனர். தற்போது, ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன், முஸ்லிம் பெண் ஒருவரை "ஒருதலையாக" காதலிப்பதாக கூறி, காதலை ஏற்க மறுத்த பெண் வீட்டின்   எதிரிலேயே சென்று பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு "தற்கொலை"க்கு முயன்று, பின்னர் ஹிந்துத்துவா சக்திகளின் தூண்டுதலின் பேரில், பெண்ணின் குடும்பத்தினர் தன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டதாக "வாக்குமூலம்" கொடுத்துவிட்டு இறந்துவிட்டான். தற்போது, இந்த பிரச்சினையை கையிலெடுத்து கலவரத்தை நடத்த திட்டமிட்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ்.கும்பல்.  இது பற்றிய உண்மை விவரமாவது :  திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்தவன் ஜித்து மோகனன்,(23) ஆர்.எஸ்.எஸ். ஊழியன். சரும்மூடு பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்து பெண்ணை ஒரு தலையாக காதலிப்பதாக கூறி வந்த, அவன் காதலை முஸ்லிம் பெண் ஏற்க மறுத்து விட்டார்.  மேலும், ஜித்துவின் தொடர் தொல்லைகளிலிருந்து மகளை காப்பாற்ற நினைத்த பெற்றோர், அவளது அக்காள் வீட்டுக்கு அனுப்பி வைத்ததனர். அவரது கணவர் போலீஸ் அதிகாரி வஹத். என்றாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் யோசனைப்படி, மேற்படி பெண்ணை நீதிமன்றத்தில் முன் நிறுத்தும் "ஆட்கொணர்வு மனு"வை தாக்கல் செய்தான் ஜித்து. அதையடுத்து  நீதிமன்றத்தில் ஆஜரான அந்த பெண், தனது பெற்றோர் பொறுப்பில், தான் பத்திரமாக இருப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரனான ஜித்துவுவுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என, நீதிபதியிடம் "வாக்குமூலம்" அளித்து விட்டு, பாதுகாப்பு கருதி மீண்டும் அக்காள் வீட்டுக்கே சென்றுவிட்டார். கொடூர புத்தி கொண்ட ஜித்து,  போலீஸ்காரர் "வஹத்" வீட்டுக்கே சென்று "தற்கொலை மிரட்டல்" விடுத்தும் பயனில்லாததால், தயாராக கேனில் எடுத்து சென்றிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திக்கொண்டான்.

0 comments:

Post a Comment