Tuesday, October 30, 2012

5,650 கி.மீ கால் நடையாக பயணம் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய போஸ்னியா குடிமகன்!



senad hadich

ஜித்தா:47 வயதான போஸ்னியா குடிமகன் ஸைனாத் ஹாடிச் இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 5,650 கி.மீ கால் நடையாக பிராயணம் செய்துள்ளார். நவீன போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ள இக்காலக்கட்டத்தில் கால் நடையாக பயணித்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஸைனாதை குறித்த செய்திகளை போஸ்னியா நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஹஜ்ஜின் கிரியையகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு மக்காவை அடைந்த ஸைனாத், தனது கால் நடை பிரயாணத்தை கடந்த டிசம்பர் மாதம் துவக்கியுள்ளார். 314 நாட்கள் நீண்ட இப்பிரயாணத்தில் பெரிய அளவிலான சிக்கல்கள் எதுவும் சந்திக்கவில்லை என்று போஸ்னியா பத்திரிகைளுக்கு அளித்த பேட்டியில் ஸைனாத் கூறியுள்ளார். வடகிழக்கு போஸ்னியாவில் பனோவிச்சி நகரத்தில் இருந்து ஸைனாத் தனது புனித யாத்திரையை துவக்கினார்.
200 யூரோ கரன்சியும், 20 கிலோ எடையுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே ஸைனாத் தனது பயணத்தில் எடுத்து வந்துள்ளார். செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் வழியாக இவரது புனிதப் பயணம் அமைந்தது. டிசம்பர் மாதம் பல்கேரியாவில் கடுமையான குளிர் நிலவியது. அவ்வேளைகளில் அந்நாட்டின் வீதிகள் வழியாக நடந்தது மிகுந்த சவாலாக அமைந்தது என்று ஸைனாத் கூறினார். சிரியாவில் மிகுந்த சிரமங்களை ஸைனாத் சந்திக்க வேண்டியிருந்தது.
மக்கள் புரட்சி உள்நாட்டு கலவரமாக மாறிய பஸ்ஸாருல் ஆஸாதின் சர்வாதிகார அரசு ஆளும் நாட்டில் அரசு தரப்பினர் மற்றும் புரட்சி படையினர் ஆகியோரிடமிருந்து ஒரே போலவே மரியாதைக்குறைவான வார்த்தைகளை கேட்க நேர்ந்தது. உயிருடன் மக்காவை சென்று அடைந்தால் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு சிரியாவின் கலவர பூமியில் ராணுவ வீரர் ஒருவர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக ஸைனாத் கூறுகிறார்

0 comments:

Post a Comment