Wednesday, October 17, 2012

பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் முற்றுகை!






மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி  பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர் உள்பட 200க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்தவேண்டும். மதுக்கடைகளை மூடவேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஆசாத் அவர்கள் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டச்செயலாளர் Z. முஹம்மது இல்யாஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.கே, ஷாகுல் ஹமீது, மதுக்கூர் நகர தலைவர் செய்யது முஹம்மது , அதிரை நகர செயலாளர் இல்முதீன், நகர அமைப்பாளர் அமானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
எஸ்டிபிஐ கட்சியைசேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment