Wednesday, October 3, 2012

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி எஸ்.டி.பி.ஐ நடத்திய மனித சங்கிலி போராட்டம்!


SDPI  -human chain to demand the complete elimination of alcohol!
சென்னை:பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்தி பிறந்த தினமான அக்டோபர் -02 ஆம் தேதி தமிழகத்தில் மதுவுக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை மனித சங்கிலி போராட்டம் மூலம் எஸ்.டி.பி.ஐ கட்சி துவக்கியது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மதுவின் விளைவுகள் குறித்து  தொடர்ச்சியாக 15 நாட்கள் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரப் பாடல்கள், நாடகங்கள், துண்டு பிரசுரம் விநியோகம், போஸ்டர் பிரச்சாரம், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று மக்களுக்கு மதுவின் கொடுமையினை விளக்க  அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்

0 comments:

Post a Comment