Sunday, October 21, 2012

என்று ஒழியும் இந்த டெங்குக் காய்ச்சல்?


சென்னை:டெங்குக் காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது இம்தியாஸ் என்ற சிறுவன் உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன், பழனியில் உள்ள மதீனா நகரைச் சேர்ந்த முஹம்மது இஹ்ஸான் என்பவரின் மகன் ஆவான்.
கடந்த ஒரு வாரமாக, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு டெங்குக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, சிறுவன் இம்தியாஸ் உயிரிழந்தான்

0 comments:

Post a Comment