Monday, October 22, 2012

கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டம்! (வீடியோ)




அதிரையில் நிகழும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை அதிராம்பட்டிணம் பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்று வருகிறது.



இந்த போராடத்தில் முக்கிய கோரிக்கையாக ஊரில் பெரும்பாலும் சுகாதார சீர்கேடு உள்ளது இதனை பேரூர் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் ,கொசுவை ஒழிக்க வேண்டும் தடையில்லா குடி நீர் வினியோகம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை வலியுறுத்தி இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

0 comments:

Post a Comment