Wednesday, May 4, 2011

பின்லேடனுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் பெரும் பேரணி

குவெட்டா: அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனை கெளரவப்படுத்தும் வகையில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பெரும் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்காவை எதிர்த்துக் கோஷமிட்டனர்.


அமெரிக்கக் கொடிகளை எரித்தும், அதிபர் ஒபாமாவின் கொடும்பாவிகளை எரித்தும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். அமெரிக்காவைப் பழி வாங்குவோம் என்றும் கோஷமிடப்பட்டது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எம்.பி. மெளலவி அஸ்மத்துல்லாவின் தலைமையில் பங்கேற்றனர்.
 

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் நடந்துள்ள முதலாவது பின்லேடன் ஆதரவு பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்மத்துல்லா நிகழ்ச்சியின்போது பேசுகையில், முஸ்லீம் உலகின் கதாநாயகன் பின்லேடன். அவரது தியாகம், ஏராளமான போராளிகளைக் கவர்ந்து விட்டது. மிகப் பெரிய தியாகியாக அவர் உருவெடுத்துள்ளார்.

இந்த இயக்கம் இத்துடன் முடிந்து விடாது. இது தொடரும். ஆயிரக்கணக்கான பின்லேடன்கள் பிறப்பார்கள் என்றார் அவர்.

0 comments:

Post a Comment