Wednesday, November 28, 2012

தருமபுரி : ஒரு பெண்ணுக்காக ஊரை எரித்தனர்; 8 முஸ்லிம் பெண்களை பற்றி யார் பேசுவது?

     NOV 26, தர்மபுரியில் வன்முறை நிகழ்த்தப்பட்ட அதே கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள், 8 முஸ்லிம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு, துரத்திவிட்ட சம்பவங்களை பற்றி குரல் கொடுக்க நாதியில்லை.
 
     தர்மபுரியில், ஒரு பெண்ணை ஜாதி மாறி திருமணம் முடித்த விவகாரம், ஜாதிய வன்முறையாக மாற்றப்பட்டு கொண்டாம்பட்டி, அண்ணாநகர் நத்தம் காலனி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மக்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
 
     இதற்காக குரல் கொடுக்க பலர் முன்வந்துள்ள அதேவேளையில், இதே கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள், கடந்த 2 வருடங்களில் மட்டும் 8 முஸ்லிம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு, சிலரை 4 மாதங்களிலும், ஒரு சில பெண்களை 6 மாதங்களிலும் விரட்டியடித்துள்ளனர்.
 
     எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும், தற்போது வாழவைக்கப்படவில்லை.
2 பெண்கள் மட்டும் அதிகபட்சமாக 8 மாதங்கள் இவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
    தற்போது, வாழ்விழந்து நிற்கும் ஏமாற்றப்பட்ட 8 முஸ்லிம் அபலை பெண்களை பற்றி கவலைப்பட இங்கு ஆளில்லை.

0 comments:

Post a Comment