Wednesday, November 28, 2012

"அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ்வின் ஆட்சி" : மனோதைரியம் தேவை! - அப்துல் பத்தாஹ்!

 
     NOV28, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும், இஸ்லாத்துக்கும் அதை ஏற்று நடப்போருக்கும் எதிராக நடந்து வரும் "வாழ்வா சாவா" போராட்டத்தில், இறை சட்டங்களை செயல்படுத்த முஸ்லிம்களிடம் துணிச்சலும் தைரியமும் தேவை என்றார், முப்தி அப்துல் பத்தாஹ்.


    ஹைதராபாத்தின் ரியாசத் நகர் மஸ்ஜிதே ஹபீசியா பள்ளியின் இமாம் "முப்தி" அப்துல் பத்தாஹ், நேற்று "ஆஷூரா நாள்" சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய போது, இமாம் ஹுசைன் அவர்களின் தியாக வரலாறு, இதைத்தான் நமக்கு சொல்லிக்கொடுக்கிறது,என்றார்.
 
    இமாம் ஹுசைன் அவர்களுக்கு, ஆட்சியாளன் நம்ரூதை எதிர்த்து போராடிய "இறைத்தூதர் இப்ராஹீம்" அவர்கள் முன்மாதிரியாக இருந்துள்ளார்கள், என சுட்டிக்காட்டிய,முப்தி சாஹிப், தற்போது உலகின் எல்லா பாகங்கிலும், முஸ்லிம்களுக்கெதிரான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
 
    எனவே, அவைகளை முறியடித்து, "அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ்வின் ஆட்சி" என்ற சட்டத்தை செயல்படுத்தக்கூடிய வகையில், முஸ்லிம்கள் மனோதைரியத்துடன் முன்வரவேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment