Saturday, November 24, 2012

பாலியல் பலாத்காரம்: சாமியாருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை!

 women raped by swami 

    புதுடெல்லி:நோய்க்கு சிகிட்சையளிப்பதாக பொய் கூறி இளம் பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த 67 வயது சாமியாருக்கு நீதிமன்றம் ஓர் ஆண்டு மட்டுமே கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி சுரேஷ்சந்த் ராஜன் இத்தீர்ப்பை வழங்கினார்.

    மதன் லால் என்ற சாமியாரின் வயதை கருத்தில் கொண்டு அவரது தண்டனை 2 ஆண்டிலிருந்து ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரே நீதிமன்றம் சாமியாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை தீர்ப்பாக அளித்திருந்தது .3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மதன்லால் செசன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்.

    இளம்பெண் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதன்லால் கைது செய்யப்பட்டார். டெல்லி கண்டோன்மெண்டில் ராணுவ அதிகாரிகளின் பணியாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசித்து வந்தார் அந்த இளம்பெண். நோய்க்கு சிகிட்சை அளிப்பதாக கூறி வீட்டிற்கு வந்த சாமியார் மதன்லால் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நன்றி, தூது

0 comments:

Post a Comment