Wednesday, October 31, 2012

நீரில் மூழ்கும் பிலால் நகர்: நேரடி ரிப்போர்ட் (photos)

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக எரிப்புறக்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட பிலால் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிரை தண்டர் குழுவினர்  எடுத்த புகைப்படங்கள்.                                       செடியன் குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் ஏற்கனவே இருந்த வடிகால் வாய்க்கால்கள்...

பொய்ப் பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்த பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு!

31 Oct 2012 கோழிக்கோடு:நவீன சமூக இயக்க சக்தியின் வளர்ச்சியை பொய்ப் பிரச்சாரங்களின் மணல் கோட்டையை கட்டி தடுக்க முடியாது என்ற பிரகடனத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு கோழிக்கோடு கடற்கரையில் புதிய வரலாற்றை எழுதியது.வளர்ச்சி, சீர்திருத்தம், சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் மூவர்ண கொடியை ஏந்தியவாறு கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு...

ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை!

31 Oct 2012 மக்கா:IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது.குறிப்பாக கூடார நகரமான மினாவில்...

இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது: இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!

லண்டன்:அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும் முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார். 2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு...

Tuesday, October 30, 2012

ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத் இந்தியா ஃபிராடர்நிட்டி ஃபாரம் (KIFF) நடத்திய விளையாட்டு நிகழ்ச்சி.

குவைத்: ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராடர்நிட்டி ஃபாரம் (KIFF) சார்பாக விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருநாள் தினத்தன்று மதியம் சரியாக 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்தாட்டம், கபடி, கைபந்து போட்டி, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் என பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.  இறுதியாக முதலிடம் பிடித்தவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும்...

ரிஹாப் மூலம் 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு குர்பானி இறைச்சி விநியோகம்!

புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்தது குர்பானி இறைச்சி. தேச முழுவதும் ஈதுல் அழ்ஹா என்று அழைக்கப்படும் தியாகத்திருநாளில் குர்பானி கொடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இறைச்சிகள் அடங்கிய பொட்டலங்களை ரிஹாப் இந்தியா பவுண்டேசன் விநியோகித்தது.அஸ்ஸாம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்போர் உள்பட மேற்கு வங்காளம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், டெல்லி...

5,650 கி.மீ கால் நடையாக பயணம் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய போஸ்னியா குடிமகன்!

ஜித்தா:47 வயதான போஸ்னியா குடிமகன் ஸைனாத் ஹாடிச் இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 5,650 கி.மீ கால் நடையாக பிராயணம் செய்துள்ளார். நவீன போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ள இக்காலக்கட்டத்தில் கால் நடையாக பயணித்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஸைனாதை குறித்த செய்திகளை போஸ்னியா நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.ஹஜ்ஜின் கிரியையகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு மக்காவை அடைந்த ஸைனாத், தனது கால் நடை பிரயாணத்தை கடந்த டிசம்பர் மாதம் துவக்கியுள்ளார். 314 நாட்கள்...

14 வருடம் சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆமிருக்கு திருமணம்: அருந்ததி ராய் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்பு!

30 Oct 2012 புது தில்லி:தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத் ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய், இன்னொரு முக்கிய மனித உரிமைப் போராளியான ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர் அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள் ராம் விலாஸ் பாஸ்வான், முஹம்மத் அதீப் ஆகிய பிரபலங்களுடன், ஆமிரின்...

Monday, October 29, 2012

அணுவுலை வேண்டாம்: தடையை மீறி தமிழக சட்டசபை முற்றுகையிட படுமா?

சென்னை:திட்டமிட்டபடி தமிழக சட்டசபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த உள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவித்துள்ளார். இப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சி இந்த போராட்டத்தில் பங்கெடுக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக அவர்...

Sunday, October 28, 2012

இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்: கஷ்மீரில் அமைதி

28 Oct 2012 புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன் அருமை மகனையே இறைவனின் கட்டளைக்கேற்ப அறுத்துப் பலியிட முன்வந்த இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக ஆடுகளையும், மாடுகளையும்,...

Saturday, October 27, 2012

அதிரை அருகே ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிஜேபி யினர் தடை

அதிரை அருகில் உள்ள வெட்டிகாடு என்ற கிராமத்தில் பல இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள்.  இன்று ஹஜ் பெருநாள் என்பதால் அவர்கள் பள்ளிவாசலில்  தக்பீர்  முழங்கி கொண்டு இருந்த போது அந்த  ஊரில் உள்ள பாரதிய ஜனதா  கட்சியினர் பள்ளிவாசல் அருகில் கோயில் இருப்பதால் தக்பீர் மற்றும் தொழுவதற்கு தடை போட்டுள்ளனர்.இதனால் அங்கு  இருவர்களுக்கு இடையே    வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனை தகவல் அறிந்த  20 க்கு மேற்பட்ட நமதூர்...

இரத்தம் கொடுக்க இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்: சாகுல் ஹமீது(வீடியோ)

அதிராம்பட்டினத்தை சேர்ந்த  நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணி தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் கடந்த 12 வருடங்களாக 23 தடைவக்குமேல் இரத்த தானம்  செய்து பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார். நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தனது இளமை காலம் தொட்டே சமுக சேவையாற்றி வரும் இவர் அவசர காலத்தில் இரத்தம் கொடுப்போரில் முதன்மை வகிக்கிறார் . இன்றைய அவசர உலகில் நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம். அதுபோல் சமிபத்தில்...

அதிரை வாசிகளின் தியாக திருநாள் நல் வாழ்த்துக்கள்! (வீடியோ)

அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை தண்டர் வாசகர்களுக்கு தியாக திருநாள் நல் வாழ்த்துக்கள். நமதூர் முக்கிய பிரமுகர்கள், காவல் துறை ஆய்வாளர் மற்றும் பொதுமக்களின் தியாக திருநாள் வாழ்த்துக்கள் இதோ!!! ...

தியாக திருநாளில் தியாகங்கள் செய்திட தயாராவோம் : எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவரின் பெருநாள் வாழ்த்து செய்தி

எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இதயம் நிறைந்த தியாக திரு­­நாள் நல்வாழ்த்துக்கள் நிறைந்த மகிழ்சியோடும், மிகுந்த சந்தோசத்தோடும் தியாக திருநாளாம் ”பக்ரீத்” பெருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு என் இதயம் நிறைந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைக்கட்டளையை ஏற்று, தள்ளாத வயதில் பெற்றெடுத்த தனையனையே தியாகம் செய்ய...

Friday, October 26, 2012

துபாய் - AAMF-இன் இரண்டாம் ஆண்டு ஹஜ் பெருநாள் சந்திப்பு – 2012

காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில்... ...

ஹஜ் பெருநாளன்று மின்தடை கூடாது - அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

எதிர்வரும் தியாக திருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அதிரையில் மின் தடை செய்யக்கூடாது என அதிரை நகர பாப்புலர் ப்ரண்ட் சார்பில் நேற்று நமதூர் மின்சாரவாரிய அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.  தமிழகத்தில் தொடர் மின்வெட்டு இருந்து வந்தாலும் பண்டிகை காலங்களில் ஒரு நாள் மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்குவது வழக்கம். சமீபத்தில் நடந்த ஆயுத பூஜை அன்று கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அதிகரித்துள்ள மின்பற்றாக்குறையை காரணம்...

தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி: ‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய...

பாமனில் SDPI கட்சி மற்றும் கில்கால் ட்ரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்.

     இராமநாதபுரம் மாவட்டம் பாமனில் SDPI கட்சி மற்றும் கில்கால் ட்ரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம். மக்கள் இன்று டென்கு மற்றும் பல்வேறு மர்ம காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர் ,இதனால் மக்களின் அச்சத்தை போக்கவும் மக்கள் இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதனை தெளிவு படுத்தி கொள்ளவும் SDPI மற்றும் கில்கால் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் இதில் பாமனை சேர்ந்த மக்கள் அதிகமாக...

பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத் திருநாள் சிந்தனை தேச முன்னேற்றத்திற்கு களம் அமைக்கட்டும் ! பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி  மனித சஞ்சாரமற்ற மலைக்குன்றின் அடிவாரப் பாலைவனத்தில் இறைவனின் கட்டளைக்கு இணங்க தன் குடும்பத்தை தனித்து விட்டுச் சென்று புனித மக்காவில் மனித வாழ்க்கையின் விதையைத் தூவியவர். பகுத்தறிவிற்கு ஒவ்வாத நம்பிக்கைகள் மூலம் மக்களை அடிமைப்படுத்திய இராஜ்ஜியங்களுக்கு எதிரான போராட்டத்தை...

Thursday, October 25, 2012

ததஜ அதிரை கிளையின் ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக இந்த வருட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை வழமை போல தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள NMS  ஜெகபர் அலி மைதானத்தில் 27.10.12 சனிக்கிழமை  காலை 7.30 மணியளவில்  நடைபெறும் மேலும் இப்போது மழைகாலமாக இருப்பதால் அன்றைய தினம் மழையாக இருந்தாலோ அல்லது தண்ணீர் தேங்கி நின்றாலோ லாவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும் அதுசமயம் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி  அவர்கள்...

6 நாள் போலீஸ் காவல் முடிந்தது- அதிரை தமீம் அன்சாரி மீண்டும் சிறையில் அடைப்பு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 35). வெலிங்டன் ராணுவ முகாம், விசாகப்பட்டினம் கடற்படை தளம் உள்பட முக்கிய ராணுவ தளங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவற்றை சி.டி.யாக தயாரித்து இலங்கை தூதரகத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மூலம் கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் 18-ந்தேதி திருச்சி கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமீம் அன்சாரியை கியூ பிரிவு போலீசார்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? - கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்

கர்நாடகா : பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலம் குல்பர்காவின் தேசிய கல்லூரியில் 19.10.2012 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட தலைவர் ஷாஹித் நஸீர்  வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில துணை தலைவர் அப்துல் வாஹித் சேட் தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில் " சிறுபான்மை மற்றும் ஏழை மக்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் போராடி வருவதால் அது குறிவைக்கப்படுகிறது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா...

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? சம நீதி மாநாடு - கேரளா மாநிலம் கொச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்

கேரளா : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரளா மாநிலம் கொச்சியில் 18.10 .2012 அன்று நடத்திய சம நீதி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறித்து அவதொர்று பரப்புபவர்களுக்கு இம்மக்கள் வெள்ளம் தகுந்ததொரு பாடமாக அமைந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் எந்தவொரு இயக்கத்தையும் தவறான பிரச்சாரங்கள் மூலம் தடுத்து விட முடியாது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தியது. தேச விரோத சக்திகளுக்கு தகுந்ததொரு...

அதிரைக்கு வந்தது குர்பானிக்கான ஒட்டகங்கள்! புகைப்படம் உங்களுக்காக...

இந்த வருடமும் அதிரை தமுமுகவின் சார்பில் ஒட்டகம் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எராளமானவர்கள் கூட்டு சேர்ந்து வருகின்ற தியாக திருநாளன்று இறைவனுக்காக ஒட்டகத்தை அறுத்து பலியிட உள்ளனர் அதற்க்கான ஒட்டகங்கள் நேற்று அதிரைக்கு வந்து சேர்ந்தன. இதனை ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர். இன்னும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் அதிரையில் இப்போதே களைகட்ட துவங்கிவிட்டது. புகைப்படம்:...