Tuesday, April 16, 2013

4 வயது மாணவி "ஸ்கார்ப்" அணியத் தடை : பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்!

4 வயது மாணவி "ஸ்கார்ப்" அணியத் தடை : பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்!


அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தின் "போக்கா கட்" என்ற ஊரில் உள்ள "கிறிஸ்டோ ஜோதி ஸ்கூல்" நிர்வாகம், தலையை மறைத்து ஸ்கார்ப் அணிந்து வந்த 4 வயது முஸ்ல...ிம் சிறுமியின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அலி அஹ்மத் என்பவரின் 4 வயது மகள் "பாத்திமா பீபீ"யை கடந்த 2012 நவம்பரில் "போக்கா கட்"டில் உள்ள "Kristo Jyoti School" என்ற பள்ளியில் சேர்த்தனர்.

5 மாதம் வரை பிரச்சினை இல்லாமல் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த மாணவி பாத்திமாவிடம் மார்ச் 21 ந்தேதி, ஸ்கார்ப் அணிந்து வரக்கூடாது என்று மிரட்டியது பள்ளி நிர்வாகம்.

குழந்தையின் பேச்சை பொருட்படுத்தாத பெற்றோர், தொடர்ந்து ஸ்கார்ப் போட்டே பள்ளிக்கு அனுப்பி வந்தனர்.

7 நாள் அவகாசத்துக்குப்பின் மார்ச் 28ந்தேதியன்று, பள்ளியின் முதல்வர் ஜோஸ் வர்கீஸ் சார்பில், பெற்றோர் பெயருக்கு நோட்டீஸ் அனுப்பிய பள்ளி நிர்வாகம், 15 நாட்களுக்குள் ஸ்கார்ப் அணிவதை நிறுத்த முடியாவிட்டால் உங்கள் மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என, அதில் கூறப்பட்டிருந்தது.

பள்ளியின் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட சென்ற பெற்றோரை ஃபாதர் ஜோஸ் வர்கீஸ் மிரட்டி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, ஒன்றும் புரியாத அலி அஹ்மத், ஜெயந்த குமார் கோஸ்வாமி என்ற வழக்கறிஞர் மூலம் ஏப்ரல் 8ந்தேதியன்று உயர்நீதி மன்றத்தில் "ரிட் பெட்டிஷன்" தாக்கல் செய்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மாணவி பாத்திமாவின் தந்தை அஹ்மத் அலி, இந்தியா மத சார்பற்ற நாடு, இங்கு அவரவர் விரும்பிய கோட்பாடுகளை பின் பற்றும் சுதந்திரம் உள்ள நிலையில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களிலிருந்து நீதிமன்றம் நிவாரணம் வழங்கும், என தான் நம்புவதாக தெரிவித்தார்.
See More
11Like · ·

0 comments:

Post a Comment