Sunday, April 21, 2013

டெல்லியில் கடந்த 3 மாதங்களில் 393 பாலியல் குற்ற புகார்கள் பதிவு!

                     21 Apr 2013 393 rapes in Delhi in past three months
 
     புதுடெல்லி:இந்திய தலைநகரான புது டெல்லியில் இந்த ஆண்டு ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து மார்ச் 31-ம் தேதி வரை 393 பாலியல் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று டெல்லி காவல் துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார்.
 
     இது குறித்து, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: இம்மாதம் 14-ம் தேதி மேற்கு டெல்லி சுல்தான்புரியில் பேருந்துக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக ராஜேஷ் கெüல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
     15-ம் தேதி 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மனோஜ்குமார் (22) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 
     17-ம் தேதி கிழக்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
     அதே நாளில் கிழக்கு டெல்லி ஜகத்புரி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர் பிரமோத் (32) கைது செய்யப்பட்டார்.
 
     18-ம் தேதி மேற்கு டெல்லி நஜஃப்கர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 25 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
 
     டெல்லியில், கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 661 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன என்று ராஜன் பகத் கூறினார்.

0 comments:

Post a Comment