Tuesday, April 30, 2013

இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் - திருமாவளவன் சந்திப்பு!

                              
  •      சென்னை: கடந்த 27ம் தேதி அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் சையது இக்பால் ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

         இச்சந்திப்பில் மரக்காணத்தில் தலித் மக்கள் வசிக்கின்ற காலனி பகுதிகள் வன்முறையாளர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டதையும், தலித் மக்கள் மீது மட்டுமல்லாமல் கூனிமேடு பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கூனிமேடு பகுதிக்கே நேரில் சென்று, தான் பார்வையிட்ட தகவல்களையும் அப்போது பகிர்ந்து கொண்ட திருமா, இந்த கலவரம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதை சுட்டிக் காட்டி வரவேற்றார்.

          இந்திய தவ்ஹீத் ஜமாஅத் விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்

          திரு மாவளவனுடன் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் முஹம்மது யூசுஃப், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மற்றும் சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இரு தரப்பு நிர்வாகிகளும் பல்வேறு விஷயங்களைப் பறிமாறிக் கொண்டனர்.thanks, asia

0 comments:

Post a Comment