Monday, April 22, 2013

மியான்மரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தடுக்க தவறிய காவல்துறை!

                  22 Apr 2013 2013-04-08T100551Z_837900719_GM1E9481DZ601_RTRMADP_3_INDONESIA
 
     யங்கூன்:மியான்மரில் கடந்த மாதம் முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாத குழுக்கள் நடத்திய தாக்குதலை போலீசார் தடுக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
     மியான்மரின் மெக்தீலா நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது புத்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர். இக்கலவரக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் கடைகளை அடித்து நொறுக்குதல், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீவைத்தல் போன்ற நடந்த கலவரத்தை போலீசார் தடுக்காமல் இருப்பது இக்காட்சிகளில் தெரியவந்துள்ளது.
 
மெக்தீலாவில் நடந்த கலவரத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

0 comments:

Post a Comment