Thursday, April 25, 2013

பா.ஜ.க தலைவர்களிடம் அத்வானி பணம் வாங்கியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்!-தனஞ்சய குமார் அறிவிப்பு!

                       25 Apr 2013 family1s
 
     பெங்களூர்:கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது, பாஜ மூத்த தலைவர் அத்வானியும், அவருடைய குடும்பத்தினரும் சில பாஜ தலைவர்கள் பணம் மிரட்டி வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடக ஜனதா கட்சியின் மாநில செயல் தலைவருமான தனஞ்செயகுமார் நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். இதற்கு பாஜ தலைவர்கள், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அத்வானி பற்றி தனஞ்ஜெய குமார் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்பதாக எடியூரப்பா கூறினார்.
 
     இந்நிலையில், மைசூர் மாவட்டத்தில் கர்நாடக ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனஞ்ஜெய குமார் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘அத்வானி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது கூறிய குற்றச்சாட்டில் இப்போதும் உறுதியாக உள்ளேன். பணம் வாங்கவில்லை என்பதை எழுத்து மூலமாக அத்வானி தெரிவித்தால், அவர் பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளேன்’’ என்றார்

0 comments:

Post a Comment