Monday, April 22, 2013

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:டெல்லியில் 2-வது நாளாக போராட்டம்!

                        22 Apr 2013 students-demonstrate-in-ahmedabad-on-april-20-2013-against-the-brutal-rape-of-a-five-year-old-girl-in-new-delhi-2
 
     புதுடெல்லி:இந்தியத் தலைநகர் டெல்லியில் ஐந்து வயது சிறுமி ஒருவர் அண்மையில் கடத்தப்பட்டு இரண்டு நாள் காலம் கொடூரமான பாலியல் வக்கிரத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது சம்பந்தமாக இரண்டாவது நாளாக டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன.
 
     இந்த விவகாரத்தை அதிகாரிகள் கையாண்ட விதம் பற்றி ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் முன்பாகவும், போலீஸ் தலைமையகம் முன்பாகவும் கூடினர். பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா நிறைய முன்னேற்றங்களைக் காணவேண்டியுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் முன்னர்கூறியிருந்தார். பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
 
      சிறுமி மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் நாளை திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இன்னொரு சந்தேகத்திற்குரிய நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சிறுமிக்கு பெரிய அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படுவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியுள்ளது என ஞாயிறன்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
     டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணொருவர் பலரால் ஒரே நேரத்தில்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில்பாலியல் வன்முறைக்கு எதிராக மக்களின் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

0 comments:

Post a Comment