Friday, April 26, 2013

MMMK !!!

"கிச்சான் புகாரி" கைது செய்யப்பட்டாரா?.... கடத்தப்பட்டாரா?? : MMMK கேள்வி!


பெங்களூரு குண்டு வெடிப்பை மையபடுத்தி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்யும் போக்கு சில நாட்களாக அரங்கேறி வருகிறது.


... "கிச்சான் புகாரி"யை இரண்டு நாட்களுக்கு முன்பே காவல்துறை கடத்தி சென்றதாகவும்,

அவரது மனைவி மதுரை உயர்நீதி மன்றத்தில் "ஆட்கொணர்வு" மனு தாக்கல் செய்ததையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாக ஊடங்களில் செய்தி வெளியானது என்றும், "மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்" கூறியுள்ளது.


கோவை சிறைவாசிகளுக்காக சட்ட ரீதியாக போராடி வரும் CTM அமைப்பை சேர்ந்த கிச்சான் புகாரி வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைக்க பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்ற இளைஞர்களும் அப்பாவிகள் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

ஊடங்கள், காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுத்து வருகின்றன.

காவல் துறையின் இதுபோன்ற போக்கு தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளும் செயலாகவே அமையும், என கவலை தெரிவித்தது, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்.

நேற்று நடந்த அணைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் உடனே இவ்விசயத்தில் தலையிட வேண்டும்.

சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்ப பட வேண்டும், என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
 
  •  

0 comments:

Post a Comment