Wednesday, April 10, 2013

டெல்லியில் மியான்மர், இலங்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக கையெழுத்து இயக்கம்


புது டெல்லியில் முஸ்லிம்ளிக்கு எதிராக கூட்டுப்படுகொலை நடக்கும் மியான்மரையும், தமிழர்களை இனப்படுகொலைச் செய்துவிட்டு அடுத்து முஸ்லிம்களின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை இந்தியா வலுவாக கண்டிக்கவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கையெழுத்து சேகரிப்பை நடத்தியது.


டெல்லி பல்கலைக்கழகம், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் மெஹ்பூப் ஸஹானா கூறியதவாது மியான்மரில் புத்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 110 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 1,20,000 முஸ்லிம்களுக்கு வீடும், சொத்துக்களும் நஷ்டமடைந்துள்ளதாகவும் மேலும் இலங்கையில் தமிழ் இனத்தவர்கள் நடந்த படுகொலைக்கு பிறகு இப்பொழுது முஸ்லிம்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் புத்த பிட்சுகள் அதை உடனே இந்திய அரசு தலையிட்டு உடனே தீர்க்க வேண்டும் என தனது உரையில் கூறினார்











0 comments:

Post a Comment