Sunday, April 28, 2013

அப்பாவி முஸ்லிம்கள் கைது:மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்

                                         
 
    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள்(கிச்சான் புகாரி,பஷீர்,பீர் மைதீன் ) பலரை பெங்களூர் குண்டு வெடிப்பில் போலியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும்,உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் மேலப்பாளையத்தில் 27.04.2013 அன்றுஅனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு (எஸ்.டி.பி.ஐ ,த.மு.மு.க , பாப்புலர் ஃப்ரண்ட் ,ம.ம.ம.க,தஹ்வா ஜமாத் ,இந்திய தொவ்ஹித் ஜமாத்,ம.ம.க ,சிறுபான்மையினர் அறக்கட்டளை.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலும் பல இயக்கங்கள்) சார்பாக ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


     இதனால் மேலப்பாளையம் நகரம் முழுவதும் ஆட்டோக்கள் ,தனியார் பேருந்துகள் மற்றும் கார்கள் எதுவும் ஓட வில்லை.மேலும் அணைத்து கடைகளும் அடைக்கபட்டிருந்தது.மாலை 4 மணிக்கு பஜார் திடலில் வைத்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது.இதில் எஸ்.டி.பி.ஐ,பாப்புலர் ஃப்ரண்ட் உள்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.இந்த தர்ணா போராட்டத்திற்கு இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைபாளர் மீரான் அன்வாரி தலைமை தாங்கினார் இந்த பொதுகூட்டதிற்கு பல்லாயிரகணக்காண மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் .



















































தினமலரில் வந்த செய்தி


தினகரனில் வந்த செய்தி


தினத்தந்தியில் வந்த செய்தி


0 comments:

Post a Comment