Tuesday, April 30, 2013

எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவிவுடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு

                        
 
     விடுதலை சிறுத்தை கட்சி மாநில தலைவர் திருமாவளவன் அவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமை அலுவகத்திற்கு வருகை தந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவிவுடன் மரக்காணம் கலவரம் சம்ந்தமாக கலந்துரையாடினார் .அப்பொழுது திருமாவளவன் அவர்கள் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரிடம் மரக்காணம் கலவரத்தில் தலித்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பற்றியும்,தலித்களின் வீடுகள் எரிக்கப்பட்டது சம்ந்தமாகவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சுகளை பற்றியும் எடுத்துரைத்தார் மேலும் தலித்துகளுக்கு ஆதரவு தருமாறும் கேட்டு கொண்டார்.அருகில் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாநில நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment