Monday, April 22, 2013

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரணத்தண்டனை – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

                         22 Apr 2013 deathpenaltyresim
 
     புதுடெல்லி:குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
 
     இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி கூறியது: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பம் மிகவும் கொடூரமானது. இது போன்று குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். சமூகத்தில் உள்ள சிலருக்கு சட்டத்தின் மீதான பயம் போய்விட்டதை இச்சம்பவம் காட்டுகிறது. குற்றத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் தர போலீசார் முயற்சித்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இதுவும் கண்டனத்துக்குரியது.

     இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்” என்றார் யெச்சூரி.

0 comments:

Post a Comment