Saturday, May 7, 2011

ஏர் இந்தியா விமானிகளின் ஸ்டிரைக் வாபஸ்!!

May 7, ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஏர் இந்தியா விமானிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதனால் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வேலைக்கு திரும்பப் போவதாக ஏர் இந்தியா விமானிகள்
தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

வேலை நிறுத்ததில் ஈடுபட்ட காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஏர் இந்தியா நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானிகள் சங்கத்துக்கான அங்கீகாரமும் மீண்டும் வழங்கப்பட்து

0 comments:

Post a Comment